உடையார் பட்டமும் உடையார் பட்டம் பயன்படுத்தும் ஜாதிகளும்.
நமை ஆளும் ஈசனும்,அரசனும் உடையார் என்று உயர்வாக அழைக்கப்பட்டார்கள். உடையார் என்பது கடவுள் அரசன் இருவரையும் குறிக்கும் சிறப்பு கொண்ட ஒரு பட்டம் ஆகும். பண்டைய காலத்தில் பெருமளவு நிலத்தை உடைமை கொண்டோருக்கு ஆளும் உரிமை கொண்டோருக்கு அதாவது வேளிர்,அரசன் ஆகியோருக்கு உடையார் என்ற பட்டம் பொதுவாக காணப்பட்டது. உடையார்த் தேவர் என்பது(அகமுடையார் அல்ல) சிவகங்கை நாட்டின் அரச வம்சமான மறவர் குல அரச வாரிசுகளின் பட்டம். இவர்களின் உடையார் பட்டத்தை அவர்களின் மேல் உள்ள பற்றுதலால் சிவகங்கை,ராமநாதபுரத்தில் வாழும் பொதுமக்களில் சிலரும் கூட பிற்காலத்தில் உடையார் கோனார்; உடையார் நாடார்,உடையார் வேளார்,உடையார் அம்பலம்,உடையார் சேர்வை என்று தனது ஜாதிப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டனர்.
இன்னும் உடையார் என்ற பட்டம் வேறு பல இன மொழி பேசும் மக்களிடம் காணப்பட்டாலும் மலையமான் தெய்வீகன் நரசிங்க உடையான் வம்சத்தில் வந்த பார்க்கவ குல உடையார்கள் மட்டுமே மலையமான் நத்தமான் சுருதிமான் என்ற தனித் தனி வம்சப்பெயர் உடையவர்கள். சுருதிமான் மூப்பனார்களும் உடையார் என்றே பட்டம் கொண்டு இருந்துள்ளனர். ஆகவே தான் பொதுவாக மலையமான்,நத்தமான்,சுருதிமான் மூவரையுமே பொதுவாகவே உடையார் சாதியினர் என்பார்கள். பின்னாளில் காணியாட்சி முறையில் சிறந்து விளங்கியமையால் தஞ்சை,திருச்சி போன்ற பகுதியில் வழக்கில் உள்ள நிலக்கிழார்களின் ஜமீன்தார் முறைப்படியும்,HEAD MAN குல முதல்வர் என்ற பொருளிலும் மூப்பனார் என்ற பொதுவான பட்டம் கொண்டு சுருதிமான்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தம்மை பார்க்கவ குல மூப்பனார் என்றோ,சுருதிமான் மூப்பனார் என்றோ சொல்ல வேண்டும்.
பண்டைக்காலத்தில் இருந்தே உடையார் என்ற வம்சப்பெயர் மலையமான் தெய்வீக ராஜனின் பார்க்கவ குல வம்சத்தைச் சேர்ந்த மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்ற மூவருக்கும் பொதுவில் வழங்கியது.
ஆனால் முடியாட்சி காலத்திற்கு பிறகு உடையார் என்ற பட்டத்தை பல இனத்தவரும் குல உயர்வு வேண்டி,தாமும் நில உடமையாளர்கள் அதனால் தாமும் உடையார் என்ற பொருளிலும்,நிலத்தோடு,மண்ணோடு தொடர்புடைய தொழில் கொண்டோரும் கூட உடையார் என்று பட்டம் சூட்டிக்கொண்டனர். வெள்ளாளர்களில் நில உடைமையாளர் ஆன முதலியார் பிள்ளைமார் போன்றோரும் உடையார் என்று பட்டம் சூட்டிக் கொண்டனர்.
குலாளர்கள் (வென்று மண் கொண்ட உடையார்) என்று அழைக்கப்படும் குயவர் பெருமக்களும் தம்மை மண்ணுடையார் என்று அழைத்துக்கொள்வர். வேட்கோவர்,வேளார் என்ற பெயர்களில் உள்ள வேள் என்பது மண்ணைக் குறிக்கும். மண் கொண்டு தொழில் செய்யும் உரிமை கொண்டோர் என்ற பதத்தில் மண்ணுடையார் என்றும் கூட குயவர்கள் தம்மை அழைத்துக் கொண்டனர்.(அதனாலேயே உடையார் என்று ஜாதிப் பட்டம் யாரும் பொதுவாகக் கூறினால் குயவரா நீங்கள் என்று தான் முதலில் கேட்பார்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில்)
ஆனால் முடியாட்சி காலத்திற்கு பிறகு உடையார் என்ற பட்டத்தை பல இனத்தவரும் குல உயர்வு வேண்டி,தாமும் நில உடமையாளர்கள் அதனால் தாமும் உடையார் என்ற பொருளிலும்,நிலத்தோடு,மண்ணோடு தொடர்புடைய தொழில் கொண்டோரும் கூட உடையார் என்று பட்டம் சூட்டிக்கொண்டனர். வெள்ளாளர்களில் நில உடைமையாளர் ஆன முதலியார் பிள்ளைமார் போன்றோரும் உடையார் என்று பட்டம் சூட்டிக் கொண்டனர்.
குலாளர்கள் (வென்று மண் கொண்ட உடையார்) என்று அழைக்கப்படும் குயவர் பெருமக்களும் தம்மை மண்ணுடையார் என்று அழைத்துக்கொள்வர். வேட்கோவர்,வேளார் என்ற பெயர்களில் உள்ள வேள் என்பது மண்ணைக் குறிக்கும். மண் கொண்டு தொழில் செய்யும் உரிமை கொண்டோர் என்ற பதத்தில் மண்ணுடையார் என்றும் கூட குயவர்கள் தம்மை அழைத்துக் கொண்டனர்.(அதனாலேயே உடையார் என்று ஜாதிப் பட்டம் யாரும் பொதுவாகக் கூறினால் குயவரா நீங்கள் என்று தான் முதலில் கேட்பார்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில்)
மேலும் மைசூர் அரசர்களான உடையார்கள்,உடையா பட்டம் கொண்ட லிங்காயத்,படுகர்கள்,வெள்ளாள உடையார்கள் (முதலியார்,பிள்ளைமார்) எல்லாம் வேறு வேறு இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.
இன்னும் உடையார் என்ற பட்டம் வேறு பல இன மொழி பேசும் மக்களிடம் காணப்பட்டாலும் மலையமான் தெய்வீகன் நரசிங்க உடையான் வம்சத்தில் வந்த பார்க்கவ குல உடையார்கள் மட்டுமே மலையமான் நத்தமான் சுருதிமான் என்ற தனித் தனி வம்சப்பெயர் உடையவர்கள். சுருதிமான் மூப்பனார்களும் உடையார் என்றே பட்டம் கொண்டு இருந்துள்ளனர். ஆகவே தான் பொதுவாக மலையமான்,நத்தமான்,சுருதிமான் மூவரையுமே பொதுவாகவே உடையார் சாதியினர் என்பார்கள். பின்னாளில் காணியாட்சி முறையில் சிறந்து விளங்கியமையால் தஞ்சை,திருச்சி போன்ற பகுதியில் வழக்கில் உள்ள நிலக்கிழார்களின் ஜமீன்தார் முறைப்படியும்,HEAD MAN குல முதல்வர் என்ற பொருளிலும் மூப்பனார் என்ற பொதுவான பட்டம் கொண்டு சுருதிமான்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தம்மை பார்க்கவ குல மூப்பனார் என்றோ,சுருதிமான் மூப்பனார் என்றோ சொல்ல வேண்டும்.
அதே போல பார்க்கவர்களில் நயினார், மலையமான் உடையார்,
நத்தமான் உடையார் என்றுதெளிவாகக் கூற வேண்டும். இதுவே பிற்காலத்தில் நம் சந்ததியினருக்கு இத்தனை உடையார்களில் நாம் எந்த உடையார் என்ற குழப்பம் எல்லாம் நேராமல் காக்கும்.
Comments
Post a Comment