உடையார் பட்டமும் உடையார் பட்டம் பயன்படுத்தும் ஜாதிகளும். நமை ஆளும் ஈசனும்,அரசனும் உடையார் என்று உயர்வாக அழைக்கப்பட்டார்கள். உடையார் என்பது கடவுள் அரசன் இருவரையும் குறிக்கும் சிறப்பு கொண்ட ஒரு பட்டம் ஆகும். பண்டைய காலத்தில் பெருமளவு நிலத்தை உடைமை கொண்டோருக்கு ஆளும் உரிமை கொண்டோருக்கு அதாவது வேளிர்,அரசன் ஆகியோருக்கு உடையார் என்ற பட்டம் பொதுவாக காணப்பட்டது. உடையார்த் தேவர் என்பது(அகமுடையார் அல்ல) சிவகங்கை நாட்டின் அரச வம்சமான மறவர் குல அரச வாரிசுகளின் பட்டம். இவர்களின் உடையார் பட்டத்தை அவர்களின் மேல் உள்ள பற்றுதலால் சிவகங்கை,ராமநாதபுரத்தில் வாழும் பொதுமக்களில் சிலரும் கூட பிற்காலத்தில் உடையார் கோனார்; உடையார் நாடார்,உடையார் வேளார்,உடையார் அம்பலம்,உடையார் சேர்வை என்று தனது ஜாதிப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டனர். பண்டைக்காலத்தில் இருந்தே உடையார் என்ற வம்சப்பெயர் மலையமான் தெய்வீக ராஜனின் பார்க்கவ குல வம்சத்தைச் சேர்ந்த மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்ற மூவருக்கும் பொதுவில் வழங்கியது. ஆனால் முடியாட்சி காலத்திற்கு பிறகு உடையார் என்ற பட்டத்தை பல இனத்தவரும் குல உயர்வு வேண...